அனைத்து தொழிற்சங்கங்களினுடைய ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் (Video)
அனைத்து தொழிற்சங்கங்களினுடைய ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டக்காரர்களுக்கு அடித்தமை மற்றும் கூடாரங்களை எரித்தமையை கண்டித்து நடத்தப்படுகின்றது.
இவ்வன்முறைக்குக் காரணமான முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.