யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் (Video)
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (09.03.2023) யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக போராட்டம் நடக்கும்
பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும்,
மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக்
கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின்
அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும்
திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி
அமைச்சரின் மௌனம் ஏன் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்களால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மார்ச் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (09.03) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஒரு மணிநேர குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.
மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் ஊழியர் நியமனம், சம்பளப் பிரச்சினை போன்றவற்றினை கண்டித்தே இவ் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது 'மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கை வைக்காதே, சம்பள அதிகரிப்பின் மிகுதியை வழங்கு, மின்சார - எரிபொருள் விலையை குறை, சம்பள உயர்வை வழங்கு' போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எதிர்வரும் 15ம் திகதி இவ் கல்விசாரா ஊழியர்கள் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
