தம்முடைய காணிகளை மீட்டுத்தருமாறு கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு (VIDEO)
திருகோணமலை - மொரவெவ நாளாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு தமது சொந்த காணிகளை விட்டுச் சென்று இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதால் தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாலாம் வாய்க்கால் பகுதியில் 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் யுத்த காலத்தின் போது கைவிடப்பட்ட நிலையில், இதனையடுத்து வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களால் தற்போது குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
எனினும் குறித்த காணிகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரின்
புகைப்படங்களுடனான பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri

துப்பாக்கிச்சூட்டுக்கு முன் ஜேர்மனியில் வாழும் ’காதலிக்கு’ குறுஞ்செய்தி அனுப்பிய அமெரிக்க தாக்குதல்தாரி News Lankasri

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022