யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுப்பு
தமிழருக்கான சுகந்திர ( வேட்கை Freedom Hunters For Tamils ) அமைப்பு இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவர் ஆலயத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றினை ஒழுங்குப்படுத்தி இருந்தது.
இதன் முக்கிய நோக்கமாக யாழ்ப்பாண மேயர் மணிவண்ணனின் கைதை கண்டிப்பது மட்டுமல்லாது, அண்மைக்காலமாக தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீதப்ரியன் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் அடிமைத்தனத்துக்கு எதிராக தங்களது அமைப்பு குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் 2009 காலப்பகுதிக்கு முன்னர் செயல் படைத்தது போன்று தனது தமிழர்கள் மீதான கொடுமைகளை ஜூம் வன்முறைகளையும் ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.