இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு அமையவே இடம்பெற்றுள்ளதாகவும் அந்த இடமாற்றம் சட்டவிரோதமானது எனவும் கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று (20) ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டமானது கிழக்கு மாகாண ஆசிரியர்கள் முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் வாதிகளினாலும் இடமாற்றம் அவர்களுக்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்குரிய முறையான இடமாற்றத்தைப் பெற்றுத்தருமாறு கோரியும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமத்துவ அடிப்படையில் கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 15ஆம் திகதி மாகாண கல்விப் பணிப்பாளர் உடன் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் சில வளையங்கள் இடமாற்றங்கள் நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக அறிய கிடைத்ததாகவும்,குறிப்பிட்ட வளங்களுக்கான இடமாற்றத்தை நிறுத்தி வைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 12 ஒன்றாகும்.
அமையச் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் ஆவதுடன் அவர்கள் சமமாகச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை உறுப்புரிமை மீறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி
மூன்றாம் திகதி நடைமுறைப்படுத்த இருக்கும் ஆசிரியர் இடமாற்றத்தைச் சமத்துவ
அடிப்படையில் குறித்த இடமாற்ற பட்டியலில் இடம் பெற்று சகல ஆசிரியர்களும்
பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்தது வெளிப்படையான எமது இடமாற்றத்தை
நடைமுறைப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.