பதவி நீக்கப்பட்ட ஹரின் - மனுஷ்: வெற்றிடம் தொடர்பில் சஜித் தரப்பு விளக்கம்
புதிய இணைப்பு
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, வெற்றிடமாகவுள்ள பதவிக்கு விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துலால் பண்டாரிகொட நாடாளுமன்றம் பிரவேசிக்கவுள்ளதாகவும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
இதேவேளை, ஹரீன் பெர்னாண்டோ தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படுவதால், அந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக சபை தீர்மானம் எடுக்கும் எனவும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்புரிமை
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை கட்சி நீக்கியமை, சட்டத்திற்குட்பட்டது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஹரின் பெர்னாண்டோ அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |