மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Indian fishermen Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Kumar Jan 15, 2025 08:10 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) வாவியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்றொழிலால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என கடற்றொழிலால் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போது மட்டக்களப்பு வாவியில் நடைபெறும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பில் கடற்றொழிலார்கள் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

தொடர் பிரச்சினை 

தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும் கன்னாதாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்கள் உற்பத்திகள் தடுக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு வாவி ஓரங்களை சிலர் நிரப்பி ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை அமைப்பதன் காரணமாகவும் சில இடங்களில் வீதிகளை அமைப்பதற்கு வாவிகளை நிரப்புவதன் காரணமாகவும் மீன்கள் அழிவடையும் நிலைமை காணப்படுவதாகவும் கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

இதேபோன்று தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பாவிக்கப்படுவதனால் மற்றும் சிறிய மீன்கள் பிடிக்கப்படுவதனால் மீன்கள் பெருக்கம் குறைவதாகவும் கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவை காரணமாக வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எதிர்கால சமூகத்திற்கு சத்துள்ள மீன்களை வழங்குவதும் தடுக்கப்படுவதாகவும் இவற்றினை தடுத்து மீன் இணங்களை பாதுகாத்து எதிர்கால சமூகத்தற்கு வழங்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் குரூஸ் கடற்றொழிலாளர் அமைப்புகளிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடற்றொழில் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கூட்த்தில், மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.  

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US