கெஸ்பாவை ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு 'டெல்டா' வைரஸ் உறுதி
கெஸ்பாவையிலுள்ள ஆடை நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் ஐவருக்கு முதலில் டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்றும் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே, 120 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களின் மாதிரிகள் 'டெல்டா' பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri