கெஸ்பாவை ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு 'டெல்டா' வைரஸ் உறுதி
கெஸ்பாவையிலுள்ள ஆடை நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் ஐவருக்கு முதலில் டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்றும் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே, 120 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களின் மாதிரிகள் 'டெல்டா' பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
