கோவிட் வைரஸின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டது! - வெளியாகியுள்ள தகவல்
உலக நாடுகளுக்கு கோவிட் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், தற்போது கோவிட் வைரஸின் மற்றும் ஒரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு தற்போது மேலும் திரிபடைந்து புதிய டெல்டா பிளஸ் வகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2இன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் வைரஸின் டெல்டா, கப்பா, அல்பா, பீட்டா மற்றும் கம்மா ஆகிய மாறுபாடுகள் கணடுப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெல்டா பிளஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri