கோவிட் வைரஸின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டது! - வெளியாகியுள்ள தகவல்
உலக நாடுகளுக்கு கோவிட் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், தற்போது கோவிட் வைரஸின் மற்றும் ஒரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு தற்போது மேலும் திரிபடைந்து புதிய டெல்டா பிளஸ் வகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2இன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் வைரஸின் டெல்டா, கப்பா, அல்பா, பீட்டா மற்றும் கம்மா ஆகிய மாறுபாடுகள் கணடுப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெல்டா பிளஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri