அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்
புதிய இணைப்பு
தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி பாதுக்க - பஹல போபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (11) அதிகாலை 3 மணியளவில், தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கைக்குண்டை வீசியுள்ளார்.
சிசிடிவி கமராவில் பதிவு
சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து இறங்கி வீட்டின் கதவை தட்டி, வீட்டிற்குள் குண்டை வீசியமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. .

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், காயமடைந்த நபர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணமென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தவறான இலக்கு காரணமாகவே குறித்த இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்களின் தந்தை (55) களுபோவில போதனா வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்பு
காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.