இந்திய - இலங்கை கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச யோகா தினம் இன்று (21) இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் நடைபெற்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று (20) சிறிய ரக இராணுவ விமான மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை மற்றும் கடலோர கடற்படை, காவல் படை முகாம்களை ஆய்வு செய்த பின்னர் இராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து இன்று (21) காலை இராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.
அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார்.
பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
கடற்படை தளம்
இதனையடுத்து இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த இந்தியா என்ற பெயர் பலகைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் மீண்டும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்து சாலை மார்க்கமாக ஐ என் எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்றார்.
முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆய்வின் போது பாதுகாப்புத் துறை இணை அமைச்சருடன் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமின் நிலைய கொமாண்டர் வினைக்குமார் மற்றும் கடற்படை தளத்தின் நிலையை கொமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/7e4e76c4-2a34-406d-bb4c-ce333b5f48b9/24-6675250f1e243.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d22da411-dd0c-4ed5-8288-2cf23d9a536a/24-6675250f97dda.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b6615777-cf5e-444d-9a28-307b3f0a868e/24-66752510121aa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/65f369a2-4490-4c3e-8f53-2386015bc868/24-6675251080cbc.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/276a7c83-2162-48bc-946c-403a5a158006/24-66752510f3157.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/61ce9aa6-fc7a-467d-aa4f-7629a9e75e06/24-66752511704b6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0b6b48c-fefb-409c-808e-5a89f11910f4/24-66752511e09ce.webp)
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)
Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ் Manithan
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)