நேட்டோவில் அடுத்தக்கட்ட நகர்வு! அமெரிக்காவுடன் போலாந்து முக்கிய ஒப்பந்தம்
தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுளமையானது ஜரோப்பிய நாடுகளிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
மெரிக்கா-போலந்து ஒப்பந்தம் நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
நெருக்கமான ஒத்துழைப்பு
ஏவுகணை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை என்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க முடிவு 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால், போலந்து அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு செலவினங்களில் நேட்டோவின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
