முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சந்தை வட்டாரங்கள்
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |