கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை-பாரிஸ் கிளப் கடன் வழங்குனர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்க பாரிஸ் கிளப் கடன் வழங்குனர்கள், சீனா மற்றும் இந்தியாவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
வணிக இதழான ப்ளூம்பெர்க், அறிக்கையின்படி, பாரிஸ் கிளப், இலங்கைக்கான முக்கிய உலகளாவிய கடன் வழங்குநர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் இந்தியா
மேற்கத்திய செல்வந்த நாடுகளின் முறைசாரா கடன்கொடுனர் குழுவான பாரிஸ் குழு, ஆகஸ்ட் இறுதியில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ கோரிக்கையை அனுப்பிய பின்னர் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பதிலுக்காக காத்திருக்கிறது.
கொழும்பில் உள்ள ஆசிய இராஜதந்திரி ஒருவர், பாரிஸ் கிளப் பாரிஸ் கிளப் அல்லாத, இலங்கைக்கு கடன் வழங்குநர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பதற்கு இலங்கைக்கு உதவும் வகையில், இந்தியாவும், சீனாவும் பாரீஸ் குழுவுடன் இணைந்து செயல்பட இணங்கியுள்ளன.
கடந்த மாதம் அரசாங்கத்துடன் ஒரு பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.
அத்துடன் அதன் உயர் சபை இறுதி ஒப்புதல் அளித்து மிகவும்
தேவையான நிதியை வழங்கத் தொடங்கும் முன், இலங்கையின் கடனாளிகளின் உத்தரவாதம்
தேவை என்று நிபந்தனையும் விதித்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.