கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.
இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும்,மற்றுமொரு சிறந்த பாடசாலையில் சேர்க்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதன்படி, தெபரவெவ தேசிய பாடசாலைக்கு சிறுவன் வரவழைக்கப்பட்டு மூத்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மாலின் பயிற்றுவிப்பாளர் முன்னிலையில் பந்து வீசியுள்ளார்.
இதன்போது குறித்த சிறுவனின் பந்து வீச்சினை பார்த்து தான் ஆச்சரியமடைந்ததாக சுரங்கா லக்மாலின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
