பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 27பேர் பலி
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
மீட்கும் பணி
கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
