மரணங்கள் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை! எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்
தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கோவிட் வைரஸ் தொற்று நோயின் ஆபத்து குறைந்துள்ளது என தவறாக எண்ண வேண்டாம் என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
''மக்கள் தற்போது, வழிப்பாட்டுத்தலங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகளில் அதிகளவில் ஒன்றுக் கூடிய வருகின்றனர்.
இது தவறான முன்னுதாரணம்.
தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளதால், ஆபத்து குறைந்து விடவில்லை. எந்த நேரத்திலும் இந்த நிலைமை மாறக் கூடும்'' எனவும் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.