பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 35 பேர் பலி
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்போன 50க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
130க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் கப்பல், தனது 20 மணிநேரப் பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியவேளை பலவானில் உள்ள கோரோன் கடற்பகுதிக்கு அருகில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
விரிவான விசாரணை
தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், கப்பலின் பொருளாதாரப் பகுதியில் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, தடயவியல் குழுவினர் கோரோன் துறைமுகப் பகுதியில் தற்காலிக முகாம்களை அமைத்து சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

கப்பலில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே தீ அதிவேகமாக பரவியதாகத் தப்பிப்பிழைத்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், கப்பலின் மாலுமி குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்துக்கான பின்னணி குறித்து பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.