திருகோணமலையில் இளைஞன் எடுத்த தவறான முடிவு! கதறும் பெற்றோர்
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காண்டீபன் சஞ்சீவன் (19 வயது) என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது மகன் உறங்கிக் கொண்டிருந்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக இளைஞரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவுற்ற உடன் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri