தவறி கீழே விழுந்து ஒருவர் பரிதாபமாக பலி!
நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடிபாதமலைக்கு செல்லும் வழியில் உள்ள ஜப்பான் நாட்டு பௌத்த பிக்குகளால் கட்டப்பட்ட விகாரையில் உள்ள மசூதிக்கு வர்ணம் பூசும் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் மசூதியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (21.01.2022) மதியம் இடம்பெற்றுள்ளது.
எஸ். சுப்பையா என்ற 70 வயதுடைய மஸ்கெலியா மறே தோட்டத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மசூதியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் 1990 அம்புலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திசாலைக்கு மாற்றப்பட்டு பின் அங்கிருந்து கண்டி தேசிய வைத்திசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.