டிங்கரின் லசந்த கொலை செய்யப்படுவார் என்று பொலிஸ் மா அதிபருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதா?

Death Police Lawyer
By Kamel Nov 27, 2021 03:11 AM GMT
Report

பொலிஸார் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகளைச் செய்கின்றனரா என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த எனப்படும் டிங்கரின் லசந்த என்பவர் நேற்று காலை கொலையுண்ட சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

சட்டவிரோத படுகொலைகள் மேற்கொள்ளப்படும் போதான சகல அம்சங்களும் டிங்கரின் லசந்தவின் மரணத்தில் காணப்படுகிறது. 

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். தமது கட்சிக்காரர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக லசந்த சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு அறிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் தமது கட்சிக்காரர் கொல்லப்பட்டதாக அறிவிப்பதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் எனவும் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளர்.

இந்த தகவலை அடுத்து சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பொலிஸ் மா அதிபருக்கும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் மின்னஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தி ஊடாகவும் இது குறித்து அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தற்போதைய வட மாகாண ஆளுநரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவருமான ஜீவன் தியாகராஜாவிற்கும் அறிவித்துள்ளார்.

கைதியின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என வட மாகாண ஆளுனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி மனித உரிமை ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரிகளும் குறித்த சந்தேக நபர் கொலை செய்யப்படுவதனை தடுக்க பொலிஸாரிடம் கேரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கைதிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென நிதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை பொலிஸார் உதாசீனம் செய்து வரும் போக்கினையே அவதானிக்க முடிகின்றது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடைய நபர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கலாச்சாரம் நீடித்து வருவதாகவும் இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சட்ட விரோத படுகொலைகளுக்கான பொறுப்பு கொலை செய்யும் நபர்களை மட்டும் சாராது எனவும் அதற்கான உத்தரவு பிறப்பிப்போர், சம்பவத்தை மூடி மறைப்போரையும் சாரும் என தெரிவித்துள்ளது.

பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை ஏன் பாதுகாக்க முடியவில்லை என்பதனை பொலிஸ் மா அதிபர் விளக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அண்மையில் இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகள் வழங்குவதனை இடைநிறுத்துவதாக ஸ்கொட்லாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US