வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி
மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும(Palitha thewarapperuma) அவர்களுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்று (18.04.2024) வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி
கோவிட் பெருந்தொற்று காலத்திலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் இன, மதங்களைக் கடந்து முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பணியாறி இருந்தார்.

இதனால் மக்கள் மனங்களில் அவர் சிறந்த அரசியல்வாதியாக இடம்பிடித்திருந்த நிலையில் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் வவுனியா இளைஞர்களும் அவரது படத்திற்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பார்கவியை அழ வைக்க அன்புக்கரசி செய்த கேவலமான வேலை, ஜனனிக்கு கிடைத்த வழி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam