யாழில் நடந்த பெரும் துயரம் - உயிர் தப்ப முயன்ற இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.
விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
