ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மரணம்
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஜேர்மன் நாட்டவரின் மனைவியும் கோவிட் தொற்றுக்குள்ளாகிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கோவிட் தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றாளர் 102 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
