ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மரணம்
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஜேர்மன் நாட்டவரின் மனைவியும் கோவிட் தொற்றுக்குள்ளாகிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கோவிட் தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றாளர் 102 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam