ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி: கொக்கட்டிச்சோலையில் சம்பவம்
ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (06.03.2023) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் வெள்ளத்தம்பி என்பவரே இவ்வவாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை
சம்பவ தினத்தன்று மாலை வழக்கம்போல் குறித்த ஆற்றுப்பகுதிக்கு இறால் பிடிப்பதற்குத் தனது தோணியில் சென்றிருந்தபோது, ஆற்றுப்பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிகமான காற்றினால் குறித்த நபரின் தோணி நீரில் கவிழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவிற்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.