ஒன்றாரியோ சிறைகளில் கைதிகளின் மரண எண்ணிக்கை வெகுவாக உயர்வு - உலக செய்திகளின் தொகுப்பு
ஒன்றாரியோ சிறைகளில் கைதிகளின் மரண எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மரணங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
மாகாண பிரதம பிரேதப் பரிசோதகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 186 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,