கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Colombo
By Vethu Jan 03, 2024 04:31 PM GMT
Report

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே – பிட்டுகல பிரதேசத்தில் வீடொன்றில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத ரீதியான போதனைகளை நடத்தும் அந்த குடும்பத்தின் தந்தையும் விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளதுடன், அவரை பின்பற்றியவர்களில் இருவரும் உயிரை மாய்த்துள்ளனர்.

கொட்டாவ – மகும்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்த 46 வயதுடைய ருவன் பிரசன்ன குணரத்ன கடந்த 28ஆம் திகதி விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை

இலங்கையர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை

இறுதிச் சடங்கு

அவரது இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Death Family In Colombo Sri Lanka

பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்த இக்குடும்பமானது சில மாதங்களுக்கு முன்னர் தமது சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடு செல்லும் நம்பிக்கையில் ஹோமாகமவிற்கு குடிபெயர்ந்துள்ளது.

இவர் அப்பகுதியில் தற்காலிக குடியிருப்புக்காக வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ருவன் பிரசன்ன குணரத்னவும் மத விரிவுரைகளை வழங்கியவர் என்பதுடன் அவரது விரிவுரைகள் அடங்கிய காணொளிகளும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்

நிதி பிரச்சினை

எவ்வாறாயினும், இதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலும் நிதி பிரச்சினை இந்த சம்பவத்தை பாதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Death Family In Colombo Sri Lanka

இதேவேளை, குறித்த நபரின் சமய சொற்பொழிவுகளில் கலந்துகொண்ட ஒருவரின் சடலமும் மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரும் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த இசுரு புதர வெலிவிட்டிகொட என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் குறித்த விடுதிக்கு வந்த அவர், மாலை ஆறு மணிக்கு மேல் செல்வதாக விடுதியில் கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியில் வராததால், அறையை சோதனை செய்தபோது படுக்கையில் கிடப்பதை பார்த்த அறை ஊழியர் ஒருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வவுனியா பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய காதலர்கள்

வவுனியா பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய காதலர்கள்

புலனாய்வு பிரிவு

அதற்கமைய, மஹரகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்து ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Death Family In Colombo Sri Lanka

விஷம் குடித்து இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் இந்த நபரும் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரை பின்பற்றுபவர் எனவும் அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்த இடத்தில் சயனைட் என சந்தேகிக்கப்படும் ஒரு பை, தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யக்கல – ரபல்வத்த பிரதேசத்தில் 21 வயதுடைய யுவதியும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளதாகவும் அவரும் 46 வயதான ருவான் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைக்கு செல்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US