சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாகப் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.
இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 17 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
