விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
நீர்கொழும்பு - சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (04) மாலை கிடைத்த செய்திக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலதுருவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவு
கொலை செய்யப்பட்ட பெண், குறித்த விடுதியில் ஆண் ஒருவருடன் வசித்து வந்ததுடன், கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளதாகவம் விசாரணையில் தெரியவந்துள்ளது..
குறித்த பெண்ணின் கொலைக்கு பின்னர் அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
