புத்தளத்தில் திடீரென கரையொதுங்கிய 12 திமிங்கலங்கள்(Photos)
புத்தளம் கட்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11.02.2023) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்துள்ளனர்.
உயிரிழந்த 3 திமிங்கலங்கள்
இந்த நிலையில் உயிரிழந்த 3 திமிங்கலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திமிங்கலம் (Filet Whale) பைலட் வேல் என அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இனைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்பியமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு News Lankasri
