தலை கால்களற்ற சிறுத்தையின் சடலம் மீட்பு
ஹட்டன்(Hatton) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் சடலமொன்று இன்று(18) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
சிறுத்தையின் சடலம் மீட்பு
சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
