மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப்பிரிவை சேர்ந்த தாதி சடலமாக மீட்பு
கட்டுகஸ்தோட்டை, தொடம்வல பாலத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தாதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 36 வயதுடைய வவுனியாவில் உள்ள இராணுவ மருத்துவப் பிரிவின் இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை
இவரது சடலம் கடந்த 19 ஆம் திகதி மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (21) கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய முடியாததனால் சடலத்தின் பாகங்களை பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக சம்பத் மேற்கொண்டு வருகின்றார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam