வவுனியாவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு(Video)
வவுனியா நகர பகுதியில் இருந்து நேற்று(30) இரவு 7.30 மணியளவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மில் வீதி பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் வெளிப்புறத்தில் உள்ள ஒதுக்கு புறமான இடமொன்றில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதை அவதானித்த வர்த்தகர்கள் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவம்
சம்பவ இடத்திற்கு இரவு சென்ற வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிவிப்பு
இந்த முதியவர் வவுனியா நகரப் பகுதியில் நடமாடி திரிபவர் எனவும், நீலப் பெட்டி சேட்டும், சாரமும் அணிந்துள்ளார்.
குறித்த முதியவரது சடலத்தை பொறுப்பேற்க அல்லது அடையாளம் காண அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் கோரியுள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகரப் பகுதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு
பின்புறமாக கடந்த புதன்கிழமை 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.