பேலியகொடவில் ஆணின் சடலம் மீட்பு! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பேலியகொட, களனி கங்கையின் 4ஆவது மைல் கல் பகுதியிலிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
சடலமாக மீட்கப்பட்ட நபர் 25 தொடக்கம் 35 வயதுடையவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட டீ-சர்ட் மற்றும் க்ரீம் நிற காற்சட்டை என்பவற்றை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri