பேலியகொடவில் ஆணின் சடலம் மீட்பு! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பேலியகொட, களனி கங்கையின் 4ஆவது மைல் கல் பகுதியிலிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
சடலமாக மீட்கப்பட்ட நபர் 25 தொடக்கம் 35 வயதுடையவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட டீ-சர்ட் மற்றும் க்ரீம் நிற காற்சட்டை என்பவற்றை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam