பேலியகொடவில் ஆணின் சடலம் மீட்பு! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பேலியகொட, களனி கங்கையின் 4ஆவது மைல் கல் பகுதியிலிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
சடலமாக மீட்கப்பட்ட நபர் 25 தொடக்கம் 35 வயதுடையவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட டீ-சர்ட் மற்றும் க்ரீம் நிற காற்சட்டை என்பவற்றை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan