அடையாள தெரியாத ஆணின் சடலம் சிலாபம் பாடசாலைக்கு அருகில் மீட்பு
சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம்
உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05 அடி 7 அங்குல உயரம் கொண்ட மெல்லிய உடல் அமைப்பைக் கொண்டவர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், குட்டையான, வெள்ளை தலைமுடி கொண்டவர் எனவும், முகம் முழுவதும் தாடி உள்ளது எனவும், "ஹிதுமதே ஜீவீத்" எனக் கைதியை பச்சை குத்தியுள்ளார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

விசாரணை முன்னெடுப்பு
நேற்று மீட்கப்பட்ட இந்த சடலத்தில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam