ஜனாதிபதி தேர்தலில் நிற்க தயார் : தயாசிறி தெரிவிப்பு
"வாய்ப்பு கிடைக்குமாயின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கட்சிகளுடனான இணக்கம்
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் உள்ளேன்.
எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக போட்டியிடுவதுடன் தேர்தலில் வெற்றியும் பெறுவேன்." என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என்னும் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
