முல்லைத்தீவு போக்குவரத்து திணைக்கள பணிகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல் (Photo)
கோவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது நவம்பர் 25ம் திகதியிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றதென முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இருப்பினும் சாரதி அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதியிலிருந்து இடம்பெறும் என்பதுடன, அனைத்து சேவைகளும் கட்டாயமாக 021 2117116 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரத்தினை முற்பதிவு செய்தபின் வருகைதர வேண்டும்.
மேலும் திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்யாது வருகை தரும் சேவை பெறுநர்களுக்கான சேவையை வழங்குவதற்கு இயலாதநிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri