கேகாலையில் ஆபத்தான கொரோனா வைரஸா? அதிகமாக பாதிக்கப்படும் தொற்றாளர்கள்
கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா ஆபத்து தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கேகாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பெரும்பான்மையானோருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் அதிகமாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பெரும்பான்மையினருக்கு அதிக காய்ச்சல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை நாட்டின் ஏனைய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளிடம் காணப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் கொரோனா வைரஸின் புதிய மரபணு உருவாகி வருவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு கேகாலை பிரதேசத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் வைரஸ் மாதிரியை பரிசோதிப்பதற்காக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாணியை பெறுவதற்காக கேகாலை பிரதேசத்திற்கு வந்த நபர்களிடம் இந்த வைரஸ் பரவியதா என்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
