எதிர்வரும் 3 வாரங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
எதிர்வரும் 3 வாரங்களின் பின்னர் இலங்கையினுள் பரவும் முதன் கோவிட் மாறுபாடாக ஒமிக்ரோன் காணப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 3 ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 7 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய பொது சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மிகவும் ஆபத்தான நிலைமை நாட்டினுள் ஏற்படுவதனை தடுப்பதற்கு புத்தாண்டு காலத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan