சீனாவிற்குள் நுழைந்துள்ள ஆபத்து
உலகில் ஆபத்தான கோவிட் பிறழ்வாக கருதப்படும் ஒமிக்ரோன் தொற்றுடன் சீனாவில் ஒருவர் அடையாளம் கணப்பட்டுள்ளார்.
சீனாவில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் இவராவார்.
சீனாவின் வடக்கு நகரமான தியான்ஜினுக்கு வெளிநாட்டில் இருந்து வருகைத் தந்த பயணி ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை, ஒமிக்ரோன் தொற்று பாதிப்பால் இன்றையதினம் உலகத்தில் முதலாவது மரணம் பதிவானது.
பிரித்தானியாவில் குறித்த மரணம் பதிவாகியுள்ளது.
இதனை அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இந்நிலையில், பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.