பத்து வாரங்களின் பின் இலங்கையில் ஏற்படும் ஆபத்து! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் சுமார் பத்து வாரங்களில் டெல்டா என அழைக்கப்படும் இந்திய மாறுபாடு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பேராசிரியர் நீலிகா மாவலகே போன்ற மருத்துவ வல்லுநர்கள் இன்னும் பத்து வாரங்களில் இலங்கையில் இந்திய மாறுபாடு ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எனவே, நாட்டில் இத்தகைய சூழ்நிலையைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் பயண தடைகள் நீக்கப்பட்ட போதிலும் கோவிட் தொற்றின் ஆபத்து இன்னும் மறைந்துவிடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை இன்னும் அபாயத்தில் இருந்து வெளியே வரவில்லை.
வைரஸ் இன்னும் செயலில் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் புதிய மாறுபாடு அழிவை ஏற்படுத்தும், என்று அவர் மேலும் கூறினார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan