புளியம்பொக்கனைச் சந்தியில் வாய்பிழந்து காத்திருக்கும் உயிர் குடிக்கும் ஆபத்து
A35 வீதியின் புளியம்பொக்கனைச் சந்தியில் பரந்தன் பக்கமாக உள்ள பெரிய பாலத்தின் கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதான போக்குவரத்து வீதியிலுள்ள பாலமாக இது அமைந்துள்ள போதும் ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் அதன் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விலகல் பாலம் ஊடாகவே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்கள் நிகழின் பாலத்திற்குள் விழுவதற்கும் அவ்வாறு விழும் போது பாலத்திற்குள் உள்ள இரும்பு கம்பிகளாலும் பயணிகள் அதிக சேதத்திற்குள்ளாகும் வாய்ப்புகளும் இருக்கின்றது.
அமைக்கப்பட்டுள்ள விலகல் பாலம் ஆபத்துக்கள் நிறைந்ததாகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது. மாரி மழைக்காலம் தொடங்கவிருக்கும் போது இந்த பாலத்தின் கட்டுமானம் பூர்த்தியாகாதது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என மக்களால் கருத்துக்கூறப்படடது.
பிரதேச செயலகம் கண்டாவளையுடன் இது பற்றிய உரையாடலை மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.








