இலங்கை எதிர்நோக்கும் ஆபத்து:பிரித்தானிய பத்திரிகை
அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாடு, கடுமையான பணவீக்க அதிகரிப்பு காரணமாக 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து அடையும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக பிரித்தானியாவில் வெளியாகும் தி. கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களில் 5 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் துரிதமாக நாட்டை விட்டு செல்ல ஏற்கனவே தயாராக வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் குடும்பங்களில் பெரும்பான்மையான குடும்பங்களின் வருமானமானது அவர்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யக் கூட போதுமானதாக இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த குடும்பங்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றன எனவும் தி.கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மக்கள் அன்றாக உணவுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாகவும் உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் பீ.பீ.சி செய்தி சேவை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
