டேன் பிரியசாத் கொலை விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தம்.. புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!

CID - Sri Lanka Police Government Of Sri Lanka Sri Lanka Police Investigation
By Sajithra Apr 24, 2025 03:19 AM GMT
Report

அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

டேன் பிரியசாத்துக்கும் மேல் மாகாணத்தில் இரண்டு பாதாள உலக கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே அதிகரித்து வந்த மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், டேன் பிரியசாத் சில காலத்திற்கு முன்பு பல பாதாள உலக நபர்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசியதற்காகப் பழிவாங்கும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

 கொலை மிரட்டல்கள்

முன்னதாக, டேன் பிரியசாத்துக்கு குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே விசாரணைகள் இதனடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டேன் பிரியசாத் கொலை விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தம்.. புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..! | Dan Priyasad Killed Cid New Update

பாதாள உலக கும்பல்களில் முக்கிய நபரான கஞ்சிபானி இம்ரானும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 22 ஆம் திகதி இரவு கொலன்னாவை லக்சித செவன வீட்டுத் தொகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சில மணி நேரங்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இறந்தார்.

வெல்லம்பிட்டி, சாலமுல்லவில் உள்ள லக்சித செவன வீட்டுத் தொகுதியின் 6ஆவது மாடியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் கலந்து கொண்டுள்ளார். 

டேன் பிரியசாத் படுகொலை! அநுரவின் நகர்வின் பின்னர் சாட்சிகளை அழிக்க பரபரப்பு திட்டம்

டேன் பிரியசாத் படுகொலை! அநுரவின் நகர்வின் பின்னர் சாட்சிகளை அழிக்க பரபரப்பு திட்டம்

புத்தாண்டு விழா 

அவர் தனது உறவினர்கள் மூவருடன் ஒரு மது விருந்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து, அவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

டேன் பிரியசாத் கொலை விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தம்.. புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..! | Dan Priyasad Killed Cid New Update

அருகிலுள்ள சிசிரீவி காட்சிகளில், சந்தேக நபர்கள் படிக்கட்டுகளில் ஏறி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர்கள் தப்பிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும், பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளைத் தொடங்கினர்.

டேன் பிரியசாத்தின் சகாக்கள் 

இருப்பினும், டேன் பிரியசாத் மூன்று பேருடன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

டேன் பிரியசாத் கொலை விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தம்.. புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..! | Dan Priyasad Killed Cid New Update

அவருடன் மது அருந்திய இரண்டு பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் மேலும் அவர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த அவரது சகோதரரும், 2024 ஆம் ஆண்டு ஒருகொடவத்தை மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US