டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்!

Sri Lanka Politician Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Rajapaksa Family Crime
By Sajithra Apr 23, 2025 01:27 PM GMT
Report

நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூளையாக செயற்பட்டவருக்கு நேரடியாக உதவி செய்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு, நாட்டில் பல்வேறு கலவரங்கள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் டேன் பிரியசாத் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

முதலில் அவர் இறந்துவிட்டதாக நேற்றிரவு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்திய போதிலும், அது தவறானது என்றும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது. 

டேன் பிரியசாத் கொலை விவகாரம்! மூன்று சந்தேக நபர்கள் கைது

டேன் பிரியசாத் கொலை விவகாரம்! மூன்று சந்தேக நபர்கள் கைது

ராஜபக்ச குடும்பம் 

இருப்பினும், டேன் பிரியசாத் இன்று அதிகாலை இறந்துவிட்டார் என்பதை பொலிஸார் இன்று காலை உறுதிப்படுத்தினர். 

டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்! | Dan Dan Priyasad Update Dead Easter Attack

இதற்கிடையில், உயிரிழந்தவர் தேசிய வீரன் அல்ல என்றும் மாறாக அவர் மற்றொரு குற்றவாளி என்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

உண்மையில், டேன் பிரியசாத் என்ற நபர், நாட்டில் மத வெறுப்பைத் தூண்டுவதற்கும் மோதல்களை உருவாக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் ராஜபக்ச குடும்பத்தின் ஒரு உதவியாளர் என்றும் பல கருத்துக்கள் உள்ளன. 

இந்நிலையில், டேன் பிரியசாத்தின் கொலையின் பின்னணியில் ஒரு அரசியல் பலம் பொருந்திய ராஜபக்ச இருப்பதாக பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

"கோளையா" 

அந்தவகையில், ராஜபக்ச குடும்பத்திற்கு ஒரு முக்கிய நபராக, பேச்சு வழக்கில் "கோளையா" என்று, அதாவது, உதவியாளர் என்று அழைக்கப்படும் டேன் பிரியசாத் எதற்காக ராஜபக்ச குடும்பத்தினராலேயே கொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 

டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்! | Dan Dan Priyasad Update Dead Easter Attack

மேலும், ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக இருந்தவர்களுக்கு டேன் பிரியசாத் மிக நெருக்கமான வகையில் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் பலர் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்த நாட்டில் நடத்தப்பட்ட கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக, 6 வருடங்களை கடந்த ஈஸ்டர் தாக்குதல்கள் இருக்கின்றன. 

ஈஸ்டர் தாக்குதல்கள் 

பல வருடங்களாக இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது என்பது கடந்த கால அரசாங்கங்களில் இருந்து தற்போது வரை நீண்ட காத்திருப்பாக இருக்கின்றது.

டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்! | Dan Dan Priyasad Update Dead Easter Attack

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். 

இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி அம்பலப்படுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அவர்கள் இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டடிய விடயம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இறக்க முன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட டேன் பிரியசாத்.. எழுந்துள்ள புதிய சர்ச்சை..

இறக்க முன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட டேன் பிரியசாத்.. எழுந்துள்ள புதிய சர்ச்சை..

மௌனிக்கப்பட்ட உண்மைகள் 

அவ்வாறிருக்கையில், மறுபக்கம், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த நாட்களில் சிக்கலில் உள்ளார்கள் எனலாம். ஏனென்றால் பல முக்கிய சாட்சியங்கள் வெளிவர தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இதற்கு மத்தியில், டேன் பிரியசாத், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவரை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வலுவான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தியிருப்பார் என்பதை நன்கு அறிந்த சில குழுவினரால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

 டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்! | Dan Dan Priyasad Update Dead Easter Attack

எனவே, இது ராஜபக்சக்களின் திட்டமிட்ட செயல் என்றும் அவர் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

அதேவேளை, சமூக ஊடகங்களில் தான் செய்த குற்றங்களுக்காகவே டேன் பிரியசாத் தற்போது இயற்கையால் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், டேன் பிரியசாத்தின் மரணத்தின் மூலம் ராஜபக்ச குடும்பம், வலுவான ஆதாரங்களை மௌனமாக்கியுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி

இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US