குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் விவசாய நிலங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பியிருந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்க குளமாக உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காட்டு வெள்ளம் காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 31அடியாகக் காணப்படுவதன் காரணமாக குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வவுணதீவு பகுதியில் பெருமளவான வயல் நிலங்கள் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது வயல்கள் அறுவடை செய்யும் காலமாகவுள்ள நிலையில் இவ்வாறு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.









ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam