திருகோணமலையில் மீட்பு நடவடிக்கையில் முப்படையினர் - பதிவான பாதிப்பு நிலவரம்
புதிய இணைப்பு
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22232 குடும்பங்களை சேர்ந்த 72254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மதியம் 12. 00மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17004 குடும்பங்களை சேர்ந்த 56479 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

61பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 5228 குடும்பங்களை சேர்ந்த 15775 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 519 குடும்பங்களை சேர்ந்த 1844 நபர்களும், தம்பலகாமம் 448 குடும்பங்களை சேர்ந்த 1373 நபர்களும்,மொறவெவ 129 குடும்பங்களை சேர்ந்த 403 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1745 குடும்பங்களை சேர்ந்த 5210 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 4932 குடும்பங்களை சேர்ந்த 16339 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 391 குடும்பங்களை சேர்ந்த 1242 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.

முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலை மற்றும் டிட்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 18734 குடும்பங்களை சேர்ந்த 60458 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.11.30 நேற்று (30) மாலை 05.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 493 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 15896 குடும்பங்களை சேர்ந்த 52206 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு நிலவரம்
34 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 2838 குடும்பங்களை சேர்ந்த 8252 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 518 குடும்பங்களை சேர்ந்த 1839 நபர்களும், தம்பலகாமம் 448 குடும்பங்களை சேர்ந்த 1373 நபர்களும்,மொறவெவ 129 குடும்பங்களை சேர்ந்த 403 நபர்களும்,சேருவில 270 குடும்பங்களை சேர்ந்த 776 நபர்களும், வெருகல் 1485 குடும்பங்களை சேர்ந்த 4483 நபர்களும்,மூதூர் 4731 குடும்பங்களை சேர்ந்த 14419 நபர்களும்,கிண்ணியா 4903 குடும்பங்களை சேர்ந்த 16303 நபர்களும்,கோமரங்கடவல 242 குடும்பங்களை சேர்ந்த 803 நபர்களும் , பதவிஸ்ரீபுர 391 குடும்பங்களை சேர்ந்த 1242 நபர்களும், குச்சவெளி 5339 குடும்பங்களை சேர்ந்த 17866 நபர்களும், கந்தளாய் 278 குடும்பங்களை சேர்ந்த 951 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பிரச்சனையில் சிக்கிய சோழன்.. மனைவியாக துணை நின்று நிலா காப்பாற்றுவாரா? அய்யனார் துணை புரோமோ வீடியோ Cineulagam