காட்டு யானைகளின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க அரச அதிகாரிகளுக்கு வலியுறுத்து
மடடக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் தினம் தினம் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இன்று (22.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் 75,000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்கில் 24 கிராமசேவகர் பிரிவுகளையும் 138 கிராமங்களை கொண்ட 10.817 குடும்பங்களைச் சேர்ந்த ,33.357 சனத்தொகையையும், 23.679 வாக்காளர்களையும் உள்ளடக்கிய இந்த பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மேட்டுநிலப்பயிர் செய்கை, செய்கையையும் வாழ்வாதாரமாக பெரும்பான்மையான மக்கள் செய்துவருகின்றனர்.
2007ம் ஆண்டு மக்கள் இடம் பெயர்ந்த போது காட்டு யானைகள் எல்லைக் கிராமங்களான கெவிளியாமடு தொடக்கம் கற்பானை வரை உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளிலும், காணிகளிலும் உள்ள மரவகைகளான தென்னை, பனை, மா, பலா,வாழை, பப்பாசி, முந்திரிகை மற்றும் தானிய வகைகளான நெல்,அரிசி,சோளன்,கௌப்பி,இறுங்கு,எள்ளு போன்ற வற்றை பயிர்செய்கைகளை உணவாக உட்கொண்டு சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த தற்காலிக வாடிகள், கொட்டில்கள் 400ற்கு மேற்பட்டவைகள் அழிக்கப்பட்டுள்ளது.
தென்னை பயிர்செய்கை சேதம்
இந்நிலையில் கடந்த 19, 20, 21ம் திகதிகளில் ஆயித்தியமலை, நெல்லூரிலும் 6ம்கட்டை நெடியமடுவிலும் 8ம்கட்டைஉன்னிச்சை, பாவற்கொடிச்சேனை பிரதேசங்களில் குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உள்நுழைந்து 8 பெரிய நிரந்தர வீடுகளையும் இரண்டு தற்காலிக வீடுகள் உட்பட 10 வீடுகளை சேதப்படுத்தியதுடன் பெரும்பாலானவர்கள் மயிரிழையிலும் உயிர்த்தப்பியுள்ளனர்.
கடந்த இது பத்து வருடங்களுக்கு மேலாக இப்பகுதி குடிமனைகளுக்குள் காட்டுயானைகள் உட்புகுந்து வீடுகள் மற்றும் தென்னை பயிர்செய்கைகளை சேதப்படுத்தி வருகின்றது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் விவசாயச் செய்கையை கைவிட்டு வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டே உள்ளனர்.
யானை தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு 10 இலட்சம் நஸ்டஈடாக வழங்கினாலும். காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கும் ஒரு வருடம் கடந்தும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை அதேவேளை பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்த முடியாமல் வீடும் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சும் அசமந்த போக்கை கைவிட்டு ஒரு சரியான திட்டத்தை தயாரித்து செயல்வடிவத்தில் இறங்க இந்த பிரதேச மக்களை யானைகளில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
