தூரப்போக்குவரத்து பேருந்துகள் நாளாந்தம் பரிசோதனை
தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் இன்று தொடக்கம் நாளாந்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்தப் பரிசோதனையில் தனியார் பேருந்துகள் மாத்திரமன்றி அரசாங்கத்தின் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
பரிசோதனை
நாளாந்தம் நடைபெறும் பேருந்துவிபத்துக்கள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அதனைத்தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து அதிகார சபை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், அவற்றின் உதிரிப்பாகங்கள் குறித்த பரிசோதனை நாளாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல் News Lankasri
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri