இலங்கையில் நாளாந்தம் விபத்துகளால் 29 பேர் உயிரிழப்பு
இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துகளால் நாளாந்தம் சராசரியாக 29 பேர் உயிரிழக்கின்றனர் என சமூகநல சுகாதார நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு நபர் விபத்தால் மரணம் அடைகின்றார்.
இது தவிர்க்கக்கூடிய ஒரு பேரழிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, விபத்துத் தடுப்பு குறித்து பேசியபோது வைத்தியர் சிறிதுங்கா வெளியிட்டார்.

வாராந்த புள்ளிவிபரத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன:
• ஆண்டுக்கு சுமார் 10,600 பேர் திடீர விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
• இதனுடன், 1,500 பேர் தவறி விழுந்து ஏற்படும் காயங்களால் மரணமடைகின்றனர்.
இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வழிகள் இருக்கின்றன” என வைத்தியர் சிறிதுங்கா வலியுறுத்தினார்.
அதற்காக, பொதுமக்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri